Wednesday, June 3, 2009

வாழ்க இந்தியா ஜெய் கோ

வாழ்க இந்தியா வளர்க இரத்தக்கொதிப்பு ஊடகங்கள்

இந்திய ஊடகங்களில் பரப்பரபாக பேசப்படுகிற நாங்கள் நிற வேற்றுமைக்கு எதிரானவர்கள். உலக நாடுகளே நிற வேற்றுமை பார்க்காதீர்கள் என்ற வாசகம் தரித்த போஸ்டர்களை ஏந்திய படி வட இந்திய கல்லூரி வாயில்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இனவெறிக்கு எத்தனையோ ஆதாரங்களை தூக்கிப்பிடித்த இவர்களால் தங்களுக்குள் இருந்த ஆதாரத்தை மட்டும் அவ்வளவு எளிதாக மறுத்து விட முடியவில்லை ஆனால் கருப்பு தோல் கொண்டவன் தனியாய் ஆர்பாட்டமும் வெள்ளைத்தோல் கொண்டவர்கள் தனியாய் ஆர்பாட்டம் செய்த காட்சி இந்தியாவின் இனவேற்றுமைக்கு எதிரான ஒற்றுமை நம்மை புல்லரிக்க வைக்கிறது. ஷில்பா செட்டியுன் பழுப்பு தோலுக்கும் ஹர்பஷப் சிங்கின் பழுப்புத்தோலுக்கும் பரிந்துரைத்துப்பேசும் வட இந்திய சமுகம் இட ஓதிக்கிடு வேண்டும் என்ற தங்கள் பிறப்புரிமையை கேட்டு கருப்புத்தோல்கள் கோசம் போடும் போது மட்டும் பழுப்புத்தோலுக்காய் பரிந்துரைத்த இந்த வெள்ளைத்தோல்களின் இனவேற்றுமைக்கோஷம் எங்கே போகிறது என்று தெரியவில்லை மாட்டுத்தோலை உரித்தான் என்பதற்காய் ஒரு சமுகத்தை ஓட ஓட வீதிகளில் தோலை உரித்து கொன்ற இந்த சமுகம் தோல் அரசியலை உலகரங்கிறகு எடுத்துக்காட்டாய் இருங்கள் என்கிறது. இவர்களின் புழுத்த அரசியல்தான் இன்னும் எத்தனையோ கோயிலுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாமல் கருப்புதோல்காரனாலயே கருப்புதோல் காரன் அடித்து விரட்டப்படுவதும் வாயில் நுழையாத அன்னிய மொழி சொல்லித்தரும் கல்லூரிகளில் கருப்புத்தோலுக்கும் பழுப்புத்தோலுக்கும் எட்டிப்பார்க்ககூட இந்த வெள்ளைத்தோல் சமுகம் தான் இனவேற்றுமை பார்க்காதே என்று உலகத்திற்கு கோஷம் போடுகிறது..

இதுக்குதான் பாட்டிசொல்லுவா ஊரான் குண்டிய கழுவுறதுக்கு முதல்ல உன் குண்டிய பாருடான்னு... இவனுகள நினைச்சா இதுதான் நியாபகம் வருது

ஜெய் கோ ஜெய் கொ